நெல்லை: களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள புலிகள் காப்பகத்தில் அபூர்வ வகையை சேர்ந்த பல விலங்கினங்களும் வசித்து வருகின்றன. அவற்றுள் சிங்கவால் குரங்கு, காட்டுப் பூனை, வரையாடுகளும் அடங்கும். முன்பெல்லாம் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே விலங்கினங்களை காண முடியும் என்ற நிலை மாறி இப்போது மலைஅடிவாரத்திலேயே விலங்குகளை காண முடிகிறது. மேலும் இங்கு நிறம் மாறும் அபூர்வ பச்சோந்திகளையும் காணலாம். தலையணை பச்சையாற்றின் கரைகளில் உள்ள பாறை இடுக்குகளில் கூர்ந்து கவனித்தால் பச்சோந்திகள் நமக்கு காட்சி அளிக்கும். சில நிமிடங்களிலேயே வெவ்வேறு நிறங்களுக்கு மாறும் பச்சோந்திகளை சுற்றுலா பயணிகள் பார்த்து வியப்படைகின்றனர்.
No comments:
Post a Comment